ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

ஒருங்கிணைந்த கையுந்து பந்து கழகம்


      எண்ணற்ற விளையாட்டுகளில் கையுந்து பந்தானது பெரியவர்கள், சிறியவர்கள், இளைஞர்கள்களின் விளையாட்டு ஆர்வத்தை பூர்த்தி செய்யக்கூடிய ஒரு அற்புதமான, நேர்த்தியானவிளையாட்டாகும், இவ்விளையாட்டானது காளையார்கோவில் பகுதிகளில் மிக அதிக அளவில் அனைத்து தரப்பினராலும் விருப்ப விளையாட்டாக விளையாடப்பட்டு வருகிறது.  இவ்விளையாட்டை இப்பகுதியில் வளர்க்க, இளைஞர்களை ஆர்வமுடன் பங்கேற்கச் செய்ய, இளைஞர்களிடம் தலைமைப்பண்பை வளர்க்க, ஒரு அமைப்பு தேவை என்பதை உணர்ந்து இக்கழகமானது ஆரம்பிக்கப்படுகிறது. காளையார்கோவில் ஒருங்கிணைந்த கையுந்து பந்து கழகம், கையுந்து பந்தை வளர்க்க தனது பங்களிப்பை வழங்கும்.

நோக்கம் :
1. சிறுவர்கள், இளைஞர்களை பெரியவர்கள் இவ்விளையாட்டின் மேல் ஆர்வம் ஏற்பட பங்காற்றுதல்.
2. சிறுவர்கள், இளைஞர்கள்,பெரியவர்கள்  விளையாடுவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தல்.
3. விளையாட்டுத்திறனை முறையாக கற்றுக் கொள்ள வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தல்.
4. விளையாடுவதற்கான எண்ணங்களை உருவாக்க நல்ல பல திட்டங்களை உருவாக்குதல்.
5. காளையார்கோவிலில், வாலிபால் கழகங்கள் மேலும் உருவாக பாடுபடுதல்.
6. ஏற்கனவே உருவான கழகங்களை பேணிக்காத்து  வளர்க்க உதவுதல்.
7. விளையாட்டு மைதானங்கள் உருவாக்க உதவி செய்தல்.
8. விளையாட்டு உபகரணங்கள் ஏற்பாடு செய்தல்.
9. சிறந்த விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டு, மாவட்ட, மாநில, தேசிய அணிகளில் விளையாட வழிகாட்டுதல், மேலும் உதவி செய்தல்.
10. வாலிபால் கிளப்புகளிடையே நல்லெண்ணத்தை உருவாக்குதல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக